17 ஜூலை, 2010

இடம்பெயர்ந்த மக்களுக்கான.50.000 வீடுகளை அமைக்க இந்தியா ஒப்பந்தம்



இலங்கையில் மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கம் மகாராஸ்டிரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையிடம் வழங்கியுள்ளது. அண்மையில் இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் இந்திய விஜயம் மேற்கொண்டிருந்தபோது இந்தியப் பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன. உத்தேச வீடமைப்பு திட்டத்திற்கமைய ஒருவீட்டினை நிர்மாணிப்பதற்கு இந்தியா 2லட்சம் ரூபாவினை செலவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க ஆயிரம் கோடிரூபாவை இந்திய அரசாங்கம் செலவிடவுள்ளது. இந்த வீடமைப்பு நிர்மாணப் பணிகள் தொடர்பாக ஆராய மகாராஸ்டிரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை பிரதிநிதிகள் எதிர்வரும் வாரம் இலங்கை வரவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக