17 ஜூலை, 2010

தென்பகுதிகளில் கடும் மழை. களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!



இலங்கையின் தென்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுகங்கை ஆற்றின் நீர்ப்பெருக்கு அதிகரித்து வருவதால் இரத்தினபுரி. களுத்துறை பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக இலங்கையின் தென்பகுதிகளிலும். மலையகத்திலும் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. ஆனால், யாழப்பாணம் உட்பட்ட வடபகுதியில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக