17 ஜூலை, 2010

மெக்சிகோவில் போலீசார் மீது காரை ஏற்றிய போதை மருந்து கும்பல்



மெக்சிகோ அதிபராக கடந்த 2006-ம் ஆண்டு பிலிப் கெல்டரோன் பதவியேற்றதும் போதை மருந்து கடத்தல் கும்பலை ராணுவம் மூலமாக வேட்டையாடி வருகிறார். இதனால், போதை மருந்து கும்பல் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவர்களுடைய வன்முறைக்கு 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில், அந்த கும்பலின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜீஸஸ் அர்மண்டோ அகோஸ்தா என்பவரை போலீசார் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

இதையடுத்து, அமெரிக்க எல்லை அருகே உள்ள சியுடர் ஜவுராஜ் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது போதை மருந்து கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், ஒரு காரில் வேகமாக வந்து போலீசாரின் வாகனங்கள் மீது வேகமாக மோதினர். அதில் இரண்டு போலீசார் மற்றும் மருத்துவ உதவியாளர் ஒருவர் பலியாகினர். இந்த தகவலை மெக்சிகோ ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக