17 ஜூலை, 2010

இலங்கையில் ரயில் பாதை இந்தியா ஒப்பந்தம்




கொழும்பு:இலங்கையில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது.இலங்கையில் நடந்த போரால், வடக்கு மாகாணத்துக்கான ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது. இதனால், அங்கு ரயில் போக்குவரத்து நடக்கவில்லை. தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதையடுத்து, வடக்கு மாகாணத்துக்கு மீண்டும் ரயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தை, இந்திய ரயில்வே சர்வதேச கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது. அத்துடன், வடக்கு மாகாணத்துக்கான தொலைத்தொடர்பு திட்டமும் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக