17 ஜூலை, 2010

அரசியலமைப்புத் திருத்தம் : ஸ்ரீ.மு.காங். நாளை ஆராய்வு

அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் நிலைப்பாடு குறித்து நாளைய தினம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளது.

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு முதல் தடவையாக நாளைய தினம் நகர மண்டபத்தில் கூடவுள்ளது.

கட்சியின் அதி உயர் பீடம், அரசியல் சபை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக