14 ஜூலை, 2010

அமிர்தலிங்கம் நினைவு வழிபாடும் புத்தக வெளியீடும்


நேற்றையதினம் கனடாவில் அமரர் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் நினைவாக ஆத்மசாந்தி பூஜையுடன் கூடிய நினைவுதின கூட்டமும் புத்தக வெளியீடும் இடம்பெற்றது. கூட்டணியின் கனடா கிளை முக்கியஸ்தர் கதிர்காமநாதன் என்பவரது தலைமையில் கடந்த 20 ஆண்டுகளிற்கு மேலாக பல்வேறு இடைஞ்சல்களிற்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றது.

அமரர் அமிர்தலிங்கம் நினைவாக இடம்பெற்ற மேற்படி நினைவுதின வழிபாட்டில் அமரர் அமிர்தலிங்கத்தின் சகோதரர் மைத்துணர் உறவினர்கள் என குடும்பமாக பங்கு கொண்டு சிறப்பித்தனர். இவ் நினைவுதின வழிபாட்டில் தமிழரசு கட்சி த.வி.கூ ஆரம்பகால உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் புளொட் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சட்டத்தரணி கனக மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நினைவஞ்சலி கூட்டத்திலும் “சத்தியங்களின் சாட்சியம்” எனும் நூல் வெளியீட்டிலுமாக கலந்து கொண்டு உரையாற்றிய மலையகத்தை சேர்ந்த சந்திரசேகரன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர் அழகராஜா உட்பட பேசிய பலரும் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பண்பாட்டினையும் ஒழுக்க வழக்கங்களையும் தமிழ்மக்களின் உரிமைக்காக ஆற்றிய பங்கினையும் மக்களின் உரிமை பிரச்சினை குறித்து அவர் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்திய முறைமைகளையும் இந்திரா காந்தி அம்மையார் அவர்களுடன் இருந்த உறவினையும் அதன் மூலம் சர்வதேச ஆதரவை திரட்டிய திறனையும் சுட்டிக்காட்டி பேசினர்.

கதிர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களினால் எழுதி நேற்றையதினம் வெளியிடப்பட்ட சத்தியங்களின் சாட்சியங்கள் எனும் நூலின் முதல் பிரதியை சட்டத்தரணி கனக மனோகரன் வெளியிட்டு வைக்க அமிர்தலிங்கம் அவர்களின் சகோதரர் திகம்பரலிங்கம் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை புளொட் அமைப்பின் சார்பாக கண்ணன் பவன் ஆகியோர் பெற்றுக்கொள்ள மூன்றாவது பிரதியை ஈ.பி.டி.பி சார்பாக மகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ் புத்தகம் குறித்த கருத்துரையை மலையகத்தை சேர்ந்த ஆசிரியர் சந்திரசேகரன் அவர்கள் சிறப்பாக வழங்கினார். றிச்மன்ட் ஹில் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற நினைவுதின வழிபாட்டு பூஜை நினைவுதின கூட்டம்இ புத்தக வெளியீடு என்று இனிதே நிறைவுபெற்றது.

-சுப்பிரமணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக