14 ஜூலை, 2010

மருத்துவத் தாதி மரணம் : சந்தேகத்தில் டாக்டர் கைது

வேலணை மருத்துவ தாதி மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் நேற்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியிலுள்ள சுகாதார திணைக்களத்தின் விடுதியில் தங்கியிருந்த இவர் கைது செய்யப்பட்டு தற்பொது ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்தப் படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளியைக் கைது செய்யக் கோரியும் உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும் அனைத்து குடும்ப நல மருத்துவ தாதிகளும் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டன.

யாழ்நகரில் உள்ள பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அலுவலகத்தை இழுத்து மூடிய அவர்கள் அதன் பணிகளை முற்றாக முடக்கினர். மதியம் வரை அங்கு பணியாளர்களோ உத்தியோகத்தர்களோ செல்ல முடியாத நிலை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மருத்துவ தாதிகள் மற்றும் பணியாளர்கள், பொது சுகாதார பணியாளர்கள் என பலரும் அங்கு திரண்டிருந்து கோஷங்கள் எழுப்பினர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தின் நால்வர் கொண்ட உயர்மட்ட குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக