14 ஜூலை, 2010

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்து.

எனினும் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தாமாகவே சுய விருப்பில் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்தியாவிற்கான இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான எவ்வித திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், மக்கள் பெருமளவில் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக