14 ஜூலை, 2010

நாவலப்பிட்டியில் இன்று திடீர் வீதி சோதனை!

கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி நகரூடாகச்சென்ற சகல போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்கும் மக்களை இன்று முற்பகல் முதல் பாதுகாப்புப் பிரிவினர் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.

ஹட்டன் மற்றும் கொழும்பிலிருந்து கினிகத்தேனை நகரூடாக நாவலப்பிட்டி நோக்கி வந்த சகல பயணிகள் போக்குவரத்துப் பஸ்களும் ரம்புக்பிட்டிய பஸ்பாகே கோரளை பிரதேச சபை பணிமனைக்கு அருகில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக சோதனை சாவடிக்கு அருகில் நிறுத்தப்பட்டன.

வாகனங்களில் பயணித்த அனைவரும் இறக்கப்பட்டு, அவர்களின் தேசிய அடையாள அட்டைகளை இராணுவத்தினர் பரிசோதனைக்குட்படுத்தினர். அதே போன்று பத்தனை, திஸ்பனை, மாவெலிகம பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் போக்குவரத்துப் பஸ்களில் வருகின்றவர்கள் இம்புல்பிட்டிய பாலத்துக்கு அருகிலும்-

கண்டி மற்றும் ஹப்புகஸ்தலாவ வழியாக நாவலப்பிட்டி நோக்கி வருகின்றவர்கள் நாவலப்பிட்டி நகர நுழைவாயிலுக்கு அருகிலும் பாதுப்புப்பிரிவின் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக