14 ஜூலை, 2010

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம்: துறைமுகத்திற்கு கடல்நீர் நிரப்பும் பணி ஜனாதிபதி முன்னிலையில் ஓகஸ்ட் மாதம்


அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக முதலாம் கட்ட நடவடிக்கைகள் நவம்பர் மாதம் நிறைவடையவுள்ளதோடு துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் நடவடிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக துறைமுக அதிகார சபை கூறியது.

சீன ஹார்பர் நிறுவனம் துறைமுக நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின் இங்கு 3 கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும் என அதிகார சபை குறிப்பிட்டது. 2ம் கட்ட பணிகளும் நவம்பர் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட உள்ளது. முதலாம் கட்டப் பணிகளுக்கு 437 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தரையிலே நிர்மாணிக்கப்படுவதோடு 17 அடி ஆழத்திற்கு நிலம் தோண்டப்பட்டு அதில் நீர் நிறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக