14 ஜூலை, 2010

கிளிநொச்சி மீள்குடியேற்ற மக்கள் - ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கிளிநொச்சி விஜயத்தின் போது மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக சற்று முன்னர் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் குழுவினர் இணைந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

கிளிநொச்சி நகரத்தில் இதுவரை ஒரு லட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக