29 ஜூன், 2010

பொறியியலாளர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை


வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் அரச சேவை மற்றும் மாகாண அரச சேவைகளில் நிலவும் பொறியியலாளர்க ளுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் முதற்கட்டமாக 271 பொறியியலாளர்களுக்கான நியமனங்கள் நாளை மறுதினம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அடுத்த வருடத்தில் ஏற்படும் வெற்றிட ங்களை நிரப்புவதற்காக தகுதியுடையோரி டமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள் ளதாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 233 சிவில் பொறியியலாளர்களுக்கும் இயந்தி ரவியல் மின்சாரவியல் பொறியியலாளர்கள் 38 பேருக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்படுவதாக அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக