29 ஜூன், 2010

ஜனாதிபதி - இந்திய கடற்படைத் தளபதி நேற்று சந்திப்பு






இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்றுக் காலை அலரி மாளி கையில் இப்பேச்சுவார்த்தை இடம் பெற்றதுடன் காங்கேசன்துறை துறை முக புனரமைப்பு மற்றும் அதற்கான முன்னோடி ஆய்வுகளை இந்திய கடற்படையின் பங்களிப்புடன் மேற் கொள்வது சம்பந்தமாகவும் விரி வாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை - இந்திய கடற் துறைசார் மேம்பாடு தொடர்பான பல செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பில் இச் சந்திப்பின் போது கவனம் செலுத் தப்பட்டுள்ளதுடன் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவை, தலைமன்னாருக்கும் ராமேஸ் வரத்துக்குமிடையிலான படகுச் சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு ள்ளது.

இலங்கை - இந்திய கடற் படைகளுக்கிடையிலான பயிற்சிகளின் முன்னேற்றம் குறித் தும் மாலுமிகள் மற்றும் அதிகாரி களுக்கான பயிற்சி வகுப்புகளை இரு நாடுகளுக்குமிடையில் ஆரம் பிப்பதற்கான வேலைத் திட்டம் சம்பந்தமாகவும் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த இந்திய கடற்படைத் தளபதி; இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இரு நாடுகளு க்குமிடையிலான நட்புறவுகளை பலப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட் டார். இதன் மூலம் இலங்கை - இந்திய கடல் துறைசார் நடவடிக் கைகளில் எதிர்காலத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையின் கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, இந்தியத் தூதுவர் அசோக் காந்த் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக