29 ஜூன், 2010

இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு நிராகரிப்பு










இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மூன்றுபேரைக் கொண்ட நீதிபதிகள் குழு மனுவை நிராகரித்துள்ளது. இந்நிலையில் மனு விசாரணைக்கு வந்தவேளையில் கருத்துரைத்த நீதிபதிகள் குழுவின் தலைவர் சத்தியா ஹெட்டிகே,


மனுதாரரின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு காரணங்களைக் கொண்டிருக்கவில்லையென்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் ஜெனரல் சரத்பொன்சேகாவினால் முதலாவது நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக