29 ஜூன், 2010

மன்னாரில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சம்



மன்னார் முருங்கன் கற்கடந்தகுளம் மற்றும் மச்சைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆயுதங்களுடன் வந்த நபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 06 பேர் கொண்ட குழுவினரே மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஆயுதங்களுடன் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கற்கடந்த குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளும், பிச்சைக்குளம் பகுதியிலுள்ள 2 வீடுகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் முருங்கன் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேற்படிக் கொள்ளைச் சம்பவங்களையிட்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

மன்னாரில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், மக்கள் தமது பணம், நகைகள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பொலிசார் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

கொள்ளை தொடர்பாக விசாரணைகளை மன்னார் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக