29 ஜூன், 2010

புதிய இராணுவப் பேச்சாளராக உபய மெதவல நியமனம்

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் உபய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும், சமிக்ஞை அதிகாரியாகவும், இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.

அத்துடன் இவர் இராணுவத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வுக்கான மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வழங்கியதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

புதிய இராணுவ பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் உபய மெதவல இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்டு வந்தார்.

இராணுவத்தின் கவச பிரிவைச் சேர்ந்த இவர் சிறந்த மொழியாற்றல் உடையவர்.

மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடந்த பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் இரண்டாவது தடவையாக இராணுவ பேச்சாளராக பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக