29 ஜூன், 2010

முல்லைத்தீவில் 550 பேர் நேற்று மீள்குடியேற்றம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 195 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 550 பேர் நேற்று (28) கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்றப்பட்டனர்.

மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ். பிரதேசங்களில் உள்ள உறவினர் வீடுகளில் தங்கியிருந்த இவர்கள் விசேட பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் 19 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

மேற்படி 19 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஏற்கனவே மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளதோடு எஞ்சியவர்களே நேற்று மீள்குடியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் நாளை (30) இதே பகுதிகளில் மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக