29 ஜூன், 2010

உள்ளூர் விமான நிலையங்களை மேம்படுத்த திட்டம்






உள்ளூர் விமான நிலையங்களைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் சிறப்பான விமான சேவைகளை மேற்கொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக துறைமுகங்கள், விமானத்துறை பிரதி அமைச்சர் தயாசிரி திசேரா கூறியுள்ளார்.

இத் திட்டத்தின் சாத்தியங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நடைமுறைக்க வரும்போது நாட்டுக்குள் உள்ளூர் விமான சேவையிலும் முன்னேற்றம் ஏற்படுமென்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறை விமான நிலைய இரண்டாம் கட்ட பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையின் விஸ்தரிப்பும் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக