29 ஜூன், 2010

ரங்கேபண்டார எம்.பி. மீது தாக்குதல்: சாந்த அபேசேகரவுக்கும் சகாக்களுக்கும் நுகேகொடை நீதிமன்று அழைப்பாணை


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது ஆதரவாளர்கள் நால்வரும் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதவான் நேற்று அழைப்பாணை விடுத்தார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணையொன்றுக்கு தோற்ற வருகை தந்திருந்தபோது தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சிறிகொத்த மண்டபத்துக்குள் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் ரங்கே பண்டாரவின் மனைவியும் மகனும் ஏசி அச்சுறுத்தியதுடன் அவர்களை படமெடுத்ததாகவும் அச்சமயம் ரங்கே பண்டாரவின் மகன் இடுப்பில் கைத் துப்பாக்கியொன்றை வைத்திருந்ததாகவும் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நுகேகொடை உதவி பொலிஸ் அதிகாரி நிஹால் மெண்டிஸ் தலைமையில் விரிவாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மேற்படி முறைப்பாடு, முறைப்பாட்டாளர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை மற்றும் நீதிமன்ற செயற்பா டுகளில் சாதகமான நிலையை ஏற்படுத்து வதற்காக செய்யப்பட்ட பொய்யான முறைப்பாடு என தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் ஊழியர்கள் மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞரணியின் புத்தளம் மாவட்ட தலைவர், பாராளுமன்ற உறுப் பினர்களின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் அந்த அனைத்து சாட்சியங்களின்படி முறைப்பாட்டாளர் கூறுவதை போன்ற ஒரு சம்பவம் இடம் பெறவில்லையென்றே தெரிய வருகிறது.

இதனால் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது சாட்சியாளர்கள் நால்வரும் பொய் முறைப்பாடு செய்தமை காரணமாக அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாக மிரிஹான பொலிஸ் நிலையத்தின் அறிக்கையொன்றின் அடிப்படையிலேயே நுகேகொடை மாஜிஸ்திரேட் அழைப்பாணை பிறப் பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக