29 ஜூன், 2010

தாய்லாந்து கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிப்பு: 200 பேருடன் ஆஸ்திரேலியா செல்கிறது

தாய்லாந்து கடலில்    விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிப்பு:     200 பேருடன் ஆஸ்திரேலியா செல்கிறது

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இதில், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள் ளது. இந்த நிலையில் தற் போது தாய்லாந்து கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் ஆஸ்திரேலியா நோக்கி செல்கிறது. அதில், 200 பேர் பயணம் செய்கின் றனர். இந்த தகவலை பயங்கர வாதம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் குணவர்தனா, சன்டே அப்சர்வர் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

இக்கப்பல் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம் பியாவை நோக்கி புறப்பட்டது. ஆனால் அட்லாண்டிக் கடலை தாண்டி செல்ல அவற்றின் எந்திரங்கள் ஒத்துழைக்குமா? என்ற சந் தேகம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இக்கப்பலின் பயணப் பாதை மாற்றப்பட்டு ஆஸ்திரேலி யாவுக்கு செல்கிறது. ஹரின் பனிச்-19 என்ற இக்கப்பல் தற்போது எம்.வி.சன் சீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இக்கப்பலின் கேப்டனாக இருக்கிறார். இவர் ஆயுத கடத்தலில் மிக வும் அனுபவம் வாய்ந்தவர். இதில் 3000 பேர் வரை பயணம் செய்யலாம்.

கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பலவீன மான சட்டங்கள் உள்ளன. எனவே அகதிகள் என்று கூறி அங்கு தஞ்சம் அடைய விடுதலைப்புலிகள் செல் கின்றனர். இக்கப்பலில் விடு தலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக