29 ஜூன், 2010

நடு வானத்தில் பறந்தபோது சென்னை விமானத்தில் கோளாறு: கொச்சியில் அவசரமாக தரை இறங்கியது





கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டது. அதில் 42 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எந்திரத்தில் கோளாறு இருப்பதை பைலட் கண்டு பிடித்தார். இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விடும் ஆபத்து ஏற்பட்டது.

உடனே விமானத்தை கொச்சிக்கே திருப்பி விட முடிவு செய்தார். விமான நிலையத்துக்கு அவசர தகவல் அனுப்பினார். விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்களும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

எந்த பிரச்சினையும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. புறப்பட்ட 30-வது நிமிடத்தில் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு விமானம் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கினார்கள். அவர்களில் 12 பேர் தனியார் விமானத்தில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை செல்லும் பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக