29 ஜூன், 2010

தொழிற்பயிற்சியை முடித்த 58 முன்னாள் போராளி சிறுவர்களுக்குச் சான்றிதழ்

வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சியை முடித்துக் கொண்ட 58 முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

வைபவத்தில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

சர்வோதய நிலைய புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிலைய வளவில் நாட்டி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பசுக்கள் வழங்கும் திட்டமும் சர்வோதய எஇயல வளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக