26 மே, 2010

அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவுக்குத் தயார்-​ சீனா

அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவு வைத்துக் கொள்ள தாங்கள் தயாராகவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

​ ஆனால் நெருங்கிய ராஜதந்திர உறவை வைத்துக்கொள்ள வேண்டுமானால் தைவான்,​​ திபெத் உள்ளிட்ட எங்களின் உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா தவிர்ப்பது அவசியம் என்றும் சீனா நிபந்தனை விதித்துள்ளது.

​ சீனா-அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவு குறித்த முதல்சுற்றுப்பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்து வருகிறது.

​ இதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவிடம் 7 பரிந்துரைகளை சீனா முன்வைத்துள்ளது.​ இதில் தைவான்,​​ திபெத் விவகாரங்களும் அடங்கும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் மா ஷாவோஸý தெரிவித்தார்.

​ தவிர,​​ சர்வதேச அளவில் பயங்கரவாதம்,​​ சுற்றுச்சூழல் மாசு அடைதல் உள்ளிட்ட பொதுவான சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

​ ​ பேச்சுவார்த்தையின் முதல்கூட்டத்தில் திங்கள்கிழமை கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஹூ ​ ஜிண்டாவோ,​​ அமெரிக்காவும்,​​ சீனாவும் தங்களது உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக்கூடாது.​ பரஸ்பரம் மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று கூறினார்.

​ தைவானையும்,​​ திபெத்தையும் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது.​ இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகளால் சீனா அதிருப்தி அடைந்து வருகிறது.

​ சில மாதங்களுக்கு முன்பு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்தித்தார்.​ இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக