26 மே, 2010

2554 வது பெளத்த வருடத்தையொட்டி லேக்ஹவுஸ் முன்றலில் வெசாக் நிகழ்ச்சி




27, 28, 29 ஆம் திகதிகளில் நிகழ்வுகள்

2554 ஆவது பெளத்த வருடத்தையொட்டி லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் நிகழ்ச்சிகள் நிறுவனத்தின் முன்றலில் இடம்பெறவு ள்ளது.

வெசாக் கூடு கண்காட்சி, வெசாக் மற்றும் பெளத்த கீதங்கள் இசைத்தல், பெளத்த கதைகளை அடிப்படையாகக் கொண்ட அம்பலாங்கொடையின் பாரம்பரிய பொம்மலாட்டம் மற்றும் தானசாலை ஆகியவை உள்ளடங்கிய வெசாக் நிகழ்ச்சிகள் நாளை 27 மற்றும் 28, 29 ஆகிய தினங்களில் இடம்பெறும்.

நாளை 27 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையிலும், 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு தேசிய மரபுரிமை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையிலும், 29 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகல தலைமையிலும் நிகழ்ச்சிகள் ஆரம்பமா கின்றன. இலங்கை டெலிகொம்மின் அனுசரணையில் நடைபெறும்.

இந்த வெசாக் நிகழ்ச்சிகளுக்கு சுயாதீன ரூபவாஹினி மற்றும் லக்ஹட வானொலி ஆகியவையும் அனுசரணை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

லேக்ஹவுஸ் நிறுவனம், வெசாக் கூடு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பரிசுகளை வழங்கவுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக