26 மே, 2010

ஈராக்கில் நகை தொழிலாளர்கள் 14 பேர் சுட்டுக்கொலை அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டகாசம்


ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில், நகை செய்யும் தொழில் நடக்கும் ஒரு கடைக்குள் தீவிரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தில், நகை தொழிலாளர்கள் 14 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். பின்னர் அங்கிருந்த தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடினார்கள்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தீவிரவாதிகளை விரட்டினார்கள். போலீசார் சுட்டதில் ஒரு தீவிரவாதி இறந்தான். கொலை-கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் என்றும், தீவிரவாதிகள் சத்தம் இல்லாமல் சுடும் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக