26 மே, 2010

ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

கடந்த இருநாட்களாக தொடர்ந்த ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் இன்று மாலை வாபஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்:    போக்குவரத்து பாதிப்புஸ் பெறப்பட்டது.

ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டதால் ஊழியர்களின் போராட்டம் தொடர தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.

இதனிடையே போராட்டத்தில் தீவிரம் காட்டிய 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 20 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியாவின் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக