26 மே, 2010

இலங்கைக்கு 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான வழங்க ஈரான் இணக்கம்





இலங்கைக்கு 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான வழங்க ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் அதனைச் சுத்திகரிப்பதற்கும் ஏற்றவகையிலேயே இந்தக் கடன்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் முன்னர் 30சதவீதமான புரிந்துணர்வு உடன்பாடுகளே காணப்பட்டன. ஆனால் தற்போது முழுமையாக உதவுவதற்கு ஈரான் முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் அளவை 1லட்சம் கொள்கலன்களாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவின் நிர்மாண மற்றும் பொறியியல் நிறுவனம் முன்வந்துள்ளது. அதேவேளை இலங்கைக்குத் தேவையான எரிபொருட்களில் 60சதவீதமானவை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அத்துடன் ரஸ்யாவிடமிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக