26 மே, 2010

வடக்கில் புதிதாக ஆறு வங்கிகளைத் திறக்கவுள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பு





வடமாகாண பொருளாதார வசதி கருதி வடக்கில் புதிதாக ஆறு வங்கிகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி மாங்குளம், கிளிநொச்சி மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளில் மூன்று மக்கள் வங்கிக் கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன்; கிளிநொச்சியில் கொமர்ஷல் மற்றும் செலான் வங்கிக் கிளைகளும் திறக்கப்படவுள்ளன. மேலும் யாழ் நகரில் நேஷன் ட்ரஸ்ட் வங்கிக் கிளை ஒன்று திறக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் மாதங்களில் வடக்கு கிழக்கில் மேலும் பல வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக