26 மே, 2010

போருக்கு பின்னர் கிளிநொச்சி

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் மக்கள் சந்திப்பு

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் மக்கள் சந்திப்பு


மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் மூலம், கிளிநொச்சி போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நகரங்கள் புத்துயிர் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஆயினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்கள் மீள்குடியேற்றப் பகுதிகளையும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள சில இடங்களையும் பார்வையிட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்து வேறாக இருக்கின்றது.

மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி உட்பட பல பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடுகள், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் என்பனவும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளும் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

எனினும் வன்னிப்பிரதேசத்திற்கு முதன் முறையாக நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்று திரும்பியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் காடடர்ந்துள்ள தமது கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகளின்றி இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு குடும்பம்
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பம்-கூடாரமே குடில்
மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு குடும்பம்
மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் இன்னும் அக்கறையோடு செயற்பட்டிருக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

யுத்தம் முடிந்து ஒரு வருடமாகிவிட்ட போதிலும், இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை தரக்கூடிய மாற்றங்கள் இன்னும் எற்படவில்லை எனக்கூறும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமது மக்களின் வாழ்க்கையில் அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படத்தக்க வகையில் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக