2 ஏப்ரல், 2010

தி.மு.க., தலைவர் பதவிக்கு போட்டி: மத்திய அமைச்சர் அழகிரி பரபரப்பு பேட்டி






தி.மு.க., தலைமை பதவிக் கான தேர்தல் நடந்தால் அதில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

'கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.,வில் நான் யாரையுமே தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன். கருணாநிதியின் இடத்தை நிரப்பும் தகுதியும், திறமையும் யாருக்கும் இருப்பதாக நினைக்கவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி ஒரு பேட்டியில் குறிப் பிட்டிருந்தார். கடந்த 31ம் தேதி இரவு 10.20 மணிக்கு மத்திய அமைச்சர் அழகிரி, ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். நேற்று பகல் 12.30 மணிக்கு மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

* கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.,வில் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என கூறியுள் ளீர்களே?

ஆம். நான் தான் கூறினேன். எனக்கு தோன்றியதை கூறினேன். அப்படி கூறக் கூடாதா?

* ஜனநாயக முறையில் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது குறித்து உங்கள் கருத்து?

அவர் கூறியது சரிதான்.

* தி.மு.க., தலைமை பதவிக்கான தேர்தல் நடந்தால், நீங்கள் போட்டியிடுவீர்களா?

கண்டிப்பாக போட்டியிடுவேன்.

* ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த கேள்விக்கு இப்போது அவசியம் இல்லை. கருணாநிதி தற்போது தலைவராக உள்ள நிலையில் ஏன் இதை பற்றி இப்போது பேச வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அழகிரி பேட்டியளித்தார்.

மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி கூறுகையில், ''அரசு சார்பில் துறை ரீதியான பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தேன். பயணம், பயன்தரும் வகையில் திருப்தியாக அமைந்திருந்தது,'' என்றார். கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக