2 ஏப்ரல், 2010

வாக்குப் பெட்டிகளின் உட்புரத்திலும் ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை




எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளின் உட்புரத்திலும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க அனுமதிவழங்கியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் விடுத்த வேண்டுகோளை செவிமடுத்தே அவர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் தினம் வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் வாக்குப் பெட்டியை சீல் வைப்பதற்கு முன்னர் பெட்டியை பரிசோதித்து கட்சிப் பிரதிநிதிகள் பொட்டியின் உட்பகுதியில் கட்சி ஸ்டிக்கரை ஒட்டவேண்டும்.

அதேபோன்று வாக்கெடுப்பு முடிந்த பின்னரும் வாக்குகள் எண்ணும் நிலையத்தக்கு கொண்டுசெல்வதற்கு முன்னரும் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்ட வகை செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக