2 ஏப்ரல், 2010

அமைச்சர் அதாவுல்லாவின் மேடைக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்வீச்சு, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தினமும் சிகிச்சை-



அமைச்சர் அதாவுல்லாவின் மேடைக்கு கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றநிலை தோன்றியதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கடும் இராணுவ, பொலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மேடையில் அமைச்சர் அதாவுல்லா உரைநிகழ்த்திவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவை தினமும் கடற்படையின் விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதித்து வருவதாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் ஆரோக்கிய நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வைத்தியப் பரிசோதனைக்கு என விசேட மருத்துவ கவனம் செலுத்துமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக