9 மார்ச், 2010

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சார்பில் வன்னியில் போட்டியிடும்


புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்!
புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) ஆகியன எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இணைந்து போட்டியிடுகின்றன. வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரம் சின்னத்தில் இக்கட்சிகள் இரண்டும் போட்டியிடுகின்றன. தலைமை வேட்பாளராக புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தனும் மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), வண. பிதா பிரான்ஸிஸ் ரஞ்சித் ரூஸ்வெல்ட் அவர்கள், பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்), கந்தையா ஞானதாஸ் (சிவம்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் பாலச்சந்திரன், திருமதி சுப்பிரமணியம் வரோனிகா (இந்திரா), வயிரமுத்து திருவருட்செல்வம், துரைச்சாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு) ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வருமாறு,
இலக்கம் - 1 கந்தையா ஞானதாஸ் (சிவம்)
இலக்கம் - 2 கந்தையா சிவநேசன் (பவன்)
இலக்கம் - 3 துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு)
இலக்கம் - 4 தருமலிங்கம் சித்தார்த்தன் (புளொட் தலைவர், முன்னாள் பா.உ (வன்னி)
இலக்கம் - 5 பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்)
இலக்கம் - 6 பிரான்ஸிஸ் றஞ்சித் ரூஸ்வோல்ட் (ஆசிரியர்)
இலக்கம் - 7 வயிரமுத்து திருவருட்செல்வன் (மூர்த்தி)
இலக்கம் - 8 வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (முன்னாள் பா.உ (வன்னி)
இலக்கம் - 9 சுப்பிரமணியம் வரோனிக்கா (இந்திரா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக