9 மார்ச், 2010

நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் சுலோகம் ஏந்திப் போராட்டம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் நாடாளுமன்றம் கூடிய வேளை சுலோகம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

"பிரதமர் அவர்களே, கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரத்தில் அராஜக 'கமகே' அரசியலை உடனடியாக தடுத்து நிறுத்தி நீதியும் நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்யுங்கள்" என சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது.

கண்டி மாவட்டத்தில் அராஜகமான அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அங்கு அவர் தெரிவித்தார்.

ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கண்டி மாவட்ட வேட்பாளரான மஹிந்தானந்த அளுத் கமகேவின் தேர்தல் பிரசார நிலையமாக நாவடிப்பிட்டி பொலிஸ்நிலையம் இயங்குவதாக மனோ கணேசன் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார்.

பெரும்பான்மை இனத்தவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலமே மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது என வேட்பாளர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக