9 மார்ச், 2010

நித்யானந்தா 3 நாட்களில் பெங்களூருக்கு வருகிறார் தியான பீட ஊழியர் பேட்டி







செக்ஸ் புகாரில் சிக்கிய நித்யானந்தா சாமியார் இன்னும் 2, 3 நாட்களில் பெங்களூர் வருகிறார் என்றும், அவரை பற்றிய ஆபாச வீடியோ காட்சிகள் உண்மையல்ல என்றும் பிடதி நித்யானந்தா தியான பீடம் தெரிவித்து இருக்கிறது.

ஆபாச வீடியோ காட்சிகள்

இது குறித்து பெங்களூர் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், மூத்த சாமியுமான ஸ்ரீநித்ய சச்சிதானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூர் பிடதியில் இயங்கி வரும் நித்யானந்தா தியான பீடத்தை பற்றியும், நித்யானந்த சாமிகள் பற்றியும் பல புகார்கள் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த புகார்கள் ஆபாச வீடியோ காட்சிகளுடன் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்து உள்ளது.

இந்த செய்திகள் வெளிவந்த பிறகு அடுத்த நாள் எங்களது ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.

கொலை அல்ல

பிடதி ஆசிரமத்தில் கனடா நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டு இருக்கிறது. அந்த கனடா பக்தர் கொலை செய்யப்படவில்லை. இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது.

கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி கனடா நாட்டை சேர்ந்த மெல்வின் பொய்ட் டையமன்ட் என்பவர் மாடியில் இருந்து திடீர் என்று தவறி கீழே விழுந்தார். அதில் அவர் காயம் அடைந்து இறந்தார். இது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தோம். இந்த தகவலை அவர்கள் சந்தேகம் இன்றி ஏற்றுக்கொண்டனர்.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கீழே விழுந்ததால் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். அவரது குடும்பத்தினர் கேட்டு கொண்டதால் அவரது உடலை இந்தியாவிலேயே தகனம்செய்தோம். அவரது சாம்பலை குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்தோம். இதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை உள்பட எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.

திருச்சி வாலிபர்

அதே போல் திருச்சியை சேர்ந்த சுரேந்தர் இங்கு தான் இருக்கிறார். அவர் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை மீட்டு கொடுக்கும்படியும் அவரது பெற்றோர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

சுரேந்தரே அவரது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து இருக்கிறார். "எவ்வித வற்புறுத்தலினாலும், தியான பீடத்தில் இறங்கவில்லை. என்னுடைய முழு சுய உணர்வோடும், விருப்பத்தினாலும் தான் முழுமையாக இங்கு இருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன். தியான பீடத்துக்கு எதிராக கொடுத்து உள்ள அனைத்து புகார்களையும் வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' எனறு சுரேந்தர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

சர்ஜரி ஆபரேஷன்

நித்யானந்தா சாமிகள் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. அந்த காட்சிகள் நவீன கருவியால் "சர்ஜரி ஆபரேஷன்'' செய்யப்பட்டு காட்சிகள் புகுத்தப்பட்டு உள்ளன. இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை லெனின் என்பவர் செய்து உள்ளார்.

அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறார். அவருக்கு இதுபோன்ற நவீன உத்திகளை கையாள தெரியாது. அவருக்கு பின்னால் இருந்த சில சக்திகள் சாமிக்கு எதிராக இந்த செயலை செய்து உள்ளனர். இதை எங்களது பக்தர்கள் நம்புவார்கள்.

கும்பமேளாவில் சாமியார்

லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். வீடியோ காட்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட அடுத்த நாளே சாமிகள் இங்கு வந்திருப்பார். ஆனால் இங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அதனால் அவர் இங்கு வரவில்லை.

தற்போது அவர் கும்பமேளாவில் கலந்து கொண்டு இருக்கிறார். அதை முடித்து கொண்டு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் இங்கு வர இருக்கிறார். அப்போது அவர் உங்களை சந்திப்பார். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

நடிகை ரஞ்சிதா பக்தர்

நடிகை ரஞ்சிதா கடந்த 7 மாதங்களாக ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார். மற்ற பக்தர்களை போல் அவரும் ஒரு பக்தராக தான் வந்து சென்றார். நாட்டில் ஒருவர் மீது யார் வேண்டுமானாலும் புகார் கூறலாம். ஆனால் அந்த புகார்கள் அனைத்தும் உண்மை ஆகாது.

எங்கள் மீதான புகார்கள் குறித்து உண்மையை உலகுக்கு தெரிவிக்க நாங்கள் சட்ட ரீதியாக அணுக முடிவு செய்து இருக்கிறோம். சட்ட ரீதியான விசாரணைக்கு முழு ஆதரவு கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சாமிகள் பற்றி ஊடகங்களில் வரும் ïக செய்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. என்னால் ïகிக்கவும் முடியாது.

முழுமையான பாதுகாப்பு

இதுவரையில் எங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது பற்றி தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரமத்தில் நாங்கள் தொடர்ந்து எங்களது வழக்கமான பணிகளை செய்து வருகிறோம். போலீசார் எங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா ஒரு ஆன்மிக குருவாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அவர் தனது 3-வது வயதில் இருந்து ஆன்மிக பயணத்தை தொடங்கினார். அவர் தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார். அவரது வழியில், நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.

பிடதி ஆசிரமம் உள்ள நிலத்துக்கு 100 சதவீதம் சட்ட ரீதியாக பட்டா உள்ளது. நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு.

இவ்வாறு நித்யா சச்சிதானந்தா கூறினார்.

பேட்டியின்போது, சாமிகள் நித்ய ஞனானந்தா, நித்ய பிரமானந்தா மற்றும் பிரம்மாச்சாரினிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக