9 மார்ச், 2010

பாகிஸ்தான் எம்.பி.க்கள் அமெரிக்காவில் முழு உடற்பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து நாடு திரும்பினார்கள்


பாகிஸ்தான் எம்.பி.க்கள் குழு ஒன்று 15 நாள் பயணமாக கடந்த மாதம் 28-ந்தேதி அமெரிக்கா சென்றது. அவர்கள் டல்லஸ் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களுக்கு முழுஉடற் பரிசோதனை நடத்தப்பட இருந்தது. இதை அறிந்ததும் எம்.பி.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க நாட்டு சட்டப்படி, பாகிஸ்தான் உள்பட 14 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு கூடுதல் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதோடு முழு உடல் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும்.

முழு உடல் பரிசோதனைக்கு பாகிஸ்தான் எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்தனர். இது ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிப்பதாக உள்ளது என்று எடுத்து கூறினார்கள். இதற்கு விமானநிலைய அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த எம்.பி.க்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக