9 மார்ச், 2010

70 வயது பாட்டியை உயிருடன் புதைத்த பேராசைக்காரர்கள்


சீனாவில் பொருளாதார முன்னேற்றம் காரணமாக காலி இடங்களில் எல்லாம் அடுக்குமாடி கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. பழைய வீடுகளை எல்லாம் இடித்து விட்டு அங்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி, விற்று காசு பார்ப்பதில் ரியல் எஸ்டேட்காரர்கள் தீவிரமாகி இருக்கிறார்கள். இப்படி அடுக்குமாடி கட்டி காசு பார்த்த இவர்கள் அடுத்தவர்களின் சொத்துக்களையும் அபகரித்து அடுக்குமாடி கட்ட தயங்குவதில்லை. சீனாவில் ஹூபே மாநிலத்தில் வசிப்பவர் 70 வயது பாட்டி வாங்க் கிïயன். இவர் வசித்த பழைய வீட்டையும் புல்டோசர் வைத்து இடித்து விட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒருவர் முனைந்தார்.

அவர் தொழிலாளர்களை வைத்து வீட்டை இடிக்க முற்பட்டபோது அதை பாட்டி தடுத்தார். அவரை ஒரு தொழிலாளி தடியால் அடித்து உதைத்து அருகில் பள்ளத்தில் தள்ளினார். பிறகு அந்த பள்ளத்தில் மண்ணை அள்ளிப்போட்டு அவரை உயிருடன் புதைத்தார்.

தகவல் அறிந்து அவரது உறவினர்கள் வந்து மண்ணை தோண்டி அவரை மீட்டபோது அவர் இறந்து போய் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக