9 மார்ச், 2010

வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டை



தேர்தல்கள் செயலகம் விநியோகிக்கும் விசேட அடையாள அட்டை இல்லாத வேட்பாளர்களுக்கு வாக்கெடுப்பு நிலையங்களுக்கோ அல்லது வாக்கெண்ணும் நிலையங்களுக்கோ செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனச் செயலகம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பிரத்தியேகமான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. மாவட்ட தேர்தல் அத்தியட்சகரூடாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதனைப் பெற்றுக்கொள்ளாத வேட்பாளர்கள் தமது அரசியல் பலத்தினை பயன்படுத்தி வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வர முயற்சிக்கக் கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க கடுமையான உத்திரவினைப் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பபட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக