3 மார்ச், 2010

அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கிறிஸ்மஸ் தீவில் மேலும் முகாம்கள்

அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளாகச் செல்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு மேலும் சில இடைத்தங்கல் முகாம்கள் அமைக் கப்படுகின்றன.

தற்போது உள்ள முகாம்களில் 1920 பேர் தடுத்து வைக்கப்படலாம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இலங்கையர்கள் 56 பேருடன் ஒரு படகு சென்றதைத் தொடர் ந்து தீவிலுள்ளவர்களின் எண்ணிக்கை 1864 அடைந்துள்ளது. மேற்கொண்டு வருப வர்களைத் தங்கவைப்பதற்காக இந்த மேலதிக முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் பெரும்பாலும் இந்த வார இறுதிக்குள் அவை கட்டப்பட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கிறிஸ்மஸ் தீவு முகாம் நிரம்பிவிட்டால், தற்காலிகமாக டார்வின் இடைத்தங்கல் முகாமில் அகதிகள் தங்கவைக்கப்படுவர் என குடி வரவு அமைச்சர் கிரிஸ் இவான்ஸ் தெரி வித்துள்ளார். ஆப்கானிஸ்தவர்கள் 4 அல்லது ஐந்து வாரங்களுக்கிடையில் அங்கிருந்து விடுவிக்கப்படுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக