3 மார்ச், 2010

புத்தளத்தைச் சேர்ந்த ஜன்சிலாவுக்கு அமெரிக்காவில் விருது

அரச சார்பற்ற துறையில் சேவை புரியும் பெண் ஒருவருக்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது. சர்வதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 போ் கொண்ட பட்டியலில் இவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் இடம்பெயர்ந்தோர் மத்தியில் பணியாற்றி வரும் ஜன்சிலா மஜீட் என்பவரே இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டவராவார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவருக்கான விருதை வழங்க உள்ளார்.

இந்த விருதுக்காக, ஜன்சிலா மஜீட் உட்பட, சர்வதேசத்தில் பத்துபேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2007ஆம் ஆண்டு, இந்த வருடாந்த சர்வதேச பெண்களுக்கான விருதை, அப்போதைய ராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைஸ் ஆரம்பித்து வைத்தார்.

உலகளாவிய ரீதியில் தலைமைத்துவம், பெண்களின் உரிமை, அவர்களின் முன்னேற்றம் என்பவற்றில் சிறப்பாகச் செயற்படும் பெண்களுக்கே இந்த விருது வழங்கப்படுகிறது. __

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக