3 மார்ச், 2010

காலி கடற்பரப்பில் தத்தளித்த 12 வெளிநாட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு

காலி கடற்பரப்பில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 12 வெளிநாட்டவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, கடலில் தத்தளித்த 12 வெளிநாட்டவர்களையே இவ்வாறு காலி கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இந்தோனேஷியாவுக்குச் சொந்தமான குறிப்பிட்ட கப்பல் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீ விபத்துக்குள்ளானது.

படகிலிருந்தவர்கள் கடலில் தத்தளிப்பதை அவதானித்த மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் இவர்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களிடையே ஒரு தாய்லாந்து நாட்டவரும் 11 இந்தோனேஷிய நாட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக