1 ஏப்ரல், 2011

ஜனாதிபதி இந்தியா பயணம்




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (31) இந்தியா பயணமானதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இந்தியாவில் நடைபெறும் இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளிப்பதற்காக செல்லும் ஜனாதிபதி புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய புனித ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட உள்ளதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை அணி வெற்றியீட்டும் என உறுதியாக நம்புவதாகக் கூறிய அமைச்சர் இலங்கையர் அனைவரும் இலங்கை அணியின் வெற்றிக்கு வாழ்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இலங்கை அணி முன்னணியில் இருப்பதாக தெரிவித்த அவர் 1996ல் வென்றது போல இம்முறையும் வெற்றிபெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக