1 ஏப்ரல், 2011

இலங்கையர் உட்பட ஆஸி.யில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

இலங்கையர்களும் அங்கம் வகிக்கும் கடனட்டை மோசடிக் கும்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் கைது செய்யப்பட்டது.

சுமார் 56 பேரைக் கொண்ட இந்த மோசடிக் கும்பலில் பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து சென்றிருப்பவர்களும் உள்ளடங்குவதாக அவுஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிலையங்களில் பணியாற்றுமிலங்கையர்களைப் பணத்தைக் கொடுத்து வளைத்தெடுத்து அவர்கள் மூலம் கடனட்டைத் தகவல்களைத் திருடுவதில் பிரஸ்தாப கும்பல் ஈடுபட்டுள்ளது.

அதன்மூலம் அவுஸ்திரேலியாவில் பரந்த கடனட்டை மோசடி வலையமைப்பொன்றை உருவாக்க அவர்கள் முயன்றுள்ளனர்.அவ்வாறான மோசடிகள் மூலம் அவர்கள் இதுவரை 25.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியாக உழைத்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களிடம் இருந்த அறுபத்து மூவாயிரம் கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக