1 ஏப்ரல், 2011

யாழ். குடாவில் இரவு 9 மணிக்கு பின்னரும் சோதனை தொடரும்

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் இனிமேல் இரவு 9 மணிக்குப் பின்னரும் நீடிக்கும் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சர்வ மதத் தலைவர்கள்குழுவினருடனான சந்திப்பின் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை காலமும் இரவு 6 மணிக்கு ஆரம்பமாகும் இரக்ஷிணுவத்தினரின் வீதிச் சோதனைகள் இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றுவிடும்.அதன் பின்னர் செல்லும் வாகனங்களோ மோட்டார் சைக்கிள்களோ மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதில்லை.

குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட களவுகளும் கொலைகளும் பெரும்பாலும் பின்னிரவுகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேவேளை நெடுந்தூர வாகனங்களும் இரவு 9 மணிக்குப் பின்னரே யாழ்.குடாநாட்டுக்குள் நுழைகின்றன.

இது தொடர்பாக பல தரப்பட்டவர்களாலும் இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறப்பட்டபோதும் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட நேரம் மட்டுமே வீதிச் சோதனை மேற்கொண்டு வந்தன. இதனையடுத்தே சோதனை நடவடிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக