1 ஏப்ரல், 2011

முல்லைத்தீவுக் கடலில் 4 கடற்படை வீரர்கள் படகுடன் மாயம்





சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு டிங்கி படகொன்றில் சென்ற நான்கு கடற்படை வீரர்கள் முல்லைத்தீவுக்கு வடக்காக படகுடன் காணாமல் போயுள்ளார்கள் என்று கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய நேற்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிறிய ரக டிங்கி படகொன்றில் நான்கு கடற்படை வீரர்கள் சுண்டிக் குளத்திலிருந்து சாலைக்கு கடந்த 29 ஆம் திகதி மாலையில் சென்றுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் நேற்று பிற்பகல் வரையும் சாலையை சென்றடையவில்லை. சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு இரு மணி நேரத்தில் செல்லலாம்.

இவர்கள் முல்லை வடக்கு கடற் பரப்பில் காணாமல் போயுள்ளனர். கடற்படையினர் இவர்களை தேடும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இந்திய கடற்படையினருக்கும் கரையோர காவல் படையினருக்கும் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக அறிவித்து அவர்களின் ஊடாகவும் தேடுதல் இடம்பெறுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக