1 ஏப்ரல், 2011

ரங்கா எம்.பியின் மெய்க்காவலர் விபத்தில் உயிரிழப்பு

பிரஜைகள் முன்னணி கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா பயணம் செய்த வான் செட்டிகுளம் அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் புதன் மாலை 5 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அவரது மெய்ப்பாதுகாவலராகிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீரங்ண்கவும் அவரது சாரதியும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அதிவேகத்தில் வந்த வான் கட்டுப்பாட்டை இழந்து அஞ்சல் அலுவலக மதில் பகுதியையும் அருகில் இருந்த மதகு ஒன்றையும் உடைத்து கொண்டு போய் வீதியருகில் பாலை மரம் ஒன்றில் மோதி திரும்பி நிற்பதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் வான் பலத்த சேதத்திற்குள்ளாகியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக