1 ஏப்ரல், 2011

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவின் செயற்பாடு நீடிப்பு



கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.

எனினும் இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சார்பில் அரசாங்கத்திடம் இதுவரை கோரிக்கை விடுக்கப்பட்டதா? என்ற விடயம் உறுதிபடுத்தப்படாமல் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை ஒரு வருடத்தினால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவ்வாறு நீடிப்புக்கோரிக்கையை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கவில்லை என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது அதன் சேவைக்காலத்தை மேலும் மூன்று மாதங்களினால் நீடிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவித்தன.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தனது இறுதி பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றது.

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் கொழும்பிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் பெறப்பட்ட சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக