9 பிப்ரவரி, 2011

மரக்கறி விலையேற்றத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் கொழும்பில் நேற்று ஆரம்பம்





மரக்கறி வகைக ளின் விலையேற் றத்தைக் கட்டுப் படுத்தவும், அவற்றை நியாய விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவுமென அரசாங்கம் விசேட வேலைத் திட்டமொன்றை நேற்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த விசேடவேலைத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட வேலைத் திட்டம் கமநல சேவைகள், வனவில ங்குகள் அமைச்சின் உடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு ள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட் டத்தில் பத்து நிலையங்களில் மரக்கறி வகைகளை உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்வனவு செய்து நியாயவிலையில் சந்தைப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் கம நல திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அலுவலகங்கள் ஊடாக மரக்கறி வகைகளை உற்பத்தியாளர்களிடமி ருந்து நேரடியாகக் கொள்வனவு செய்து இந்த அலுவலகங்கள் ஊடாகச் சந்தைப்படு த்தும் என்று கமநல சேவைகள் மற்றும் வன விலங்கியல் துறை அமைச்சர் எஸ். எம். சந்திரசேன கூறினார். கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அலுவல கங்கள் 556 நாடெங்கிலும் உள்ளன.

இவற்றின் ஊடாக மரக்கறி வகைகள், பழவகைகள், அரிசி, தேங்காய் மற்றும் தானியப் பொருட்கள் என்பனவும் கொள்வனவு செய்யப்பட்டு நியாயவிலையில் சந்தைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேன கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக