9 பிப்ரவரி, 2011

வெள்ள நிவாரண கொடுப்பனவு இன்று முதல் இரட்டிப்பு



வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களுக்கான கொடுப்பனவுகள், சமைத்த உணவுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள் இன்று முதல் இரட்டிப்பாக்கப்பட்டு ள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான புதிய சுற்றுநிருபம் நேற்று சகல மாவட்ட செயலாளர் களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை இரட்டிப்பாக்கு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்த பணிப்புரைக்கமைய புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக 3 தினங்களுக்கு வழங்கப்படும் சமைத்த உணவுக்கான 100 ரூபா மற்றும் 80 ரூபா ஒருநாள் கொடுப்பனவை 200 ரூபாவாக அதிகரிக்கவும் தொடர்ந்தும் ஒரு வாரத்துக்கு சமைத்த உணவை வழங்குமாறும் புதிய சுற்றுநிருபம் சுட்டிக்காட்டுகிறது. சமைத்த உணவுக்காக ஒருவருக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்காக 80 ரூபாவுமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது.

இதேபோன்று உலர் உணவுக்காக இன்று முதல் 2 பேர் உள்ள குடும்பத்திற்கு 500 ரூபாவும், 3 முதல் 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு 750 ரூபாவும் அதற்கு மேற்பட்டோரைகொண்ட குடும்பத்துக்கு 1000 ரூபாவை கொடுப்பனவாக வழங்குவது என்றும் புதிய சுற்றுநிருபம் சுட்டிக்காட் டுகிறது.

மேலும் வெள்ள நிலை முற்றாக நீங்கிய பின்னரும் வாரத்தில் நான்கு நாட்களுக்கு தினமொன்றுக்கு 500 ரூபா வீதம் பொது வேலைகளில் ஈடுபடுவர்களுக்கு வழங்குவது எனவும் முடிவுசெய்யப்பட்டு ள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெடுப்புவதற்காக இவர்களது உதவியை பெறும் அதேவேளை மாதாந்தம் 8000 ரூபா ஒருவருக்கு கிடைக்கும் விதத்தில் கொடுப்பனவை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எம். ஏ. சுமந்திரன் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக