9 பிப்ரவரி, 2011

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை




அமைச்சர் மைத்திரிபால திட்டவட்டமாக அறிவிப்புஎக்காரணத்திற்காகவும் அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திப் போடாது. அதற்கான கோரிக்கை எதனையும் தேர்தல் ஆணையாளரிடம் முன்வைக்க வுமில்லையென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

எத்தகைய தடைகள் வந்தாலும் தேர்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் மற்றும் பிரசாரங்கள் எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இயற்கை அனர்த்தங் களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள எதிர்க்கட்சி முனைவதானது அக்கட்சியின் வங்குரோத்து நிலையையே எடுத்துக்காட்டுகிறது. ஐ.தே.க. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடொன்று நேற்று மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதெனக் கூறி ஐ.தே.க. எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த முன்வருமாறு கூறியுள்ளார்.

இது அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளக் கூடிய தருணமல்ல. எதிர்க்கட்சியினர் தமது இத்தகைய தீர்மானத்தைக் கைவிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் பதினேழு வருட ஆட்சிக் காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்தது.

அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் ஜூலை வேலை நிறுத்தம் ஏற்பட்டு ஒரு லட்சம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். எமது ஆதரவாளர்கள் 11,000 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஆயிரக் கணக்கானோரின் மீது தாக்குதல் நடத்தி கை, கால்களையும் முட மாக்கினர். 64 பேர் பலியானதுடன் எட்டு பாலியல் வல்லுறவுகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தகையவர்களே இன்று ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் எனக் கூறுகின்றனர். மக்களை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரட்டுகின்றனர். மக்கள் எதையும் மறந்து விட மாட்டார்கள். இந்த தேர்தல் முடிவின் போது ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வீழ்ச்சியையே சந்திக்கும்.

ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இன்றைய ஆட்சியில் எதிர்க்கட்சிக் காரர்களின் கூரைக்கு ஒரு கல்லை எறிந்த சம்பவம் கூட இடம்பெற வில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று ஒரு தலைவர் இல்லை. யார் தலைவர் என்ற போட்டி உள்ளது. ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதா என நாம் மக்களிடம் கேட்கவிரும்புகிறோம். இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வரப் போவ தில்லை என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை சுதந்திர தினத்தை நிராகரித்தனர். பெப்ரவரி 4ம் திகதி ஜனாதிபதியின் பிறந்த நாளோ அல்லது அரசாங்கத்தின் ஏதாவது நிகழ்வோ அல்ல. இந்த நாட்டை பிரித்தானியர்களிடமிருந்து மீட்ட வரலா ற்றுப் புகழ் மிக்க தினமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய செயற் பாடானது தேச பிதாவான டி.எஸ்.சேனநாய க்காவிற்கு செய்யும் அகெளரவமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக